Monday 6th of May 2024 04:43:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
மொடர்னாவின் கோவிட்19 தடுப்பூசி    பரீட்சார்த்த விநியோகத் திட்டம் ஆரம்பம்!

மொடர்னாவின் கோவிட்19 தடுப்பூசி பரீட்சார்த்த விநியோகத் திட்டம் ஆரம்பம்!


அமெரிக்காவின் பைசர் மருந்தாக்க நிறுவனத்தின் இறுதிக்கட்ட சோதனையில் 90 வீதம் சாதகமான விளைவுகளை வெளிப்படுத்திய கொரோனா தடுப்பூசியின் பரீட்சார்த்த விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரோட் தீவு, டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ மற்றும் டென்னசி மாகாணங்களுக்கு சோதனை முயற்சி அடிப்படையில் பைசர் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பைசர் கொரோனா தடுப்பு மருந்தை -70 டிகிரி செல்சியஸ் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டிய நிலை உள்ளதால் விநியோகத்தில் சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.

ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் கோவிட்-19 தொற்று நோயைத் தடுப்பதில் பைசர் தடுப்பூசி 90 வீதத்துக்கும் அதிகமான செயல்திறனை கொண்டதாகக் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்டுவரும் இந்தத் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என பைசர் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மூன்றாம் வாரத்திற்குள் பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க முன்னர் இறுதிக் கட்ட ஆய்வுகளில் போதுமான பாதுகாப்பு செயல் திறனை எதிர்பார்ப்பதாக மருந்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைசர் மற்றும் அதன் கூட்டு நிறுவனமாக பயோ என்டெக் அமெரிக்க அரசாங்கத்திற்கு 100 மில்லியன் சொட்டு தடுப்பூசியை வழங்க 1.95 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனைவிட மேலும் 500 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற அமெரிக்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மற்றொரு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான மொடர்னா அதன் கொரோனா தடுப்பூசி 94.5 வீதம் கொரோனாவை ஒழிப்பதில் தனது செயல் திறனை நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE